
Sign up to save your podcasts
Or


ஏமாற்றங்களைச் சந்திக்கும் துயரநிலையில்
ஏக்கங்கள் கரையை உடைக்கும்.
ஏணிப்படியான வாழ்வில் ஏறும்போது ,ஏறும்
ஏமாற்றங்களினால் நம்முள்வரும் ஏக்கங்கள்
ஏக்கங்கள் ஆலமரத்தின் விழுதுகள்தான்.
எதைப்பற்றினாலும் அடுத்தது தொடரும்.
ஏன்முடியாது எனும்கேள்விக்குப் பின்ஒருஏக்கம்.
என்னாலாகுமா எனும்ஏக்கம் என்பதுவரையும்.
ஏற்றமுடையோர் நிலைகண்டு எழும்ஏக்கம்
என்நிலைமாறுமா என்பதிலே வந்துநிற்கும்.
ஏற்றவழி கண்டும்துணை தேடிஒருஏக்கம்.
ஏமாந்ததுணையையும் ஏய்க்கஒரு ஏக்கம்.
இலட்சியம் இருந்தும் இலக்குக்காக ஏக்கம்.
இன்பம்இருந்தும் நிம்மதிக்கொரு ஏக்கம்.
அறிவிருந்தும் அன்பைத்தேடி ஒருஏக்கம்.
அன்பிருந்தும் அடைக்கலம்தேடி ஏக்கம்.
ஆசையிருந்தும் ஆன்மிகத்தில் ஒருஏக்கம்.
ஆசாபாசங்களிருந்தும் ஆண்டியாக ஏக்கம்.
எடைஉடைதனை சீராக்கும் தாக்கத்தில்
எண்சாண் உடம்பெதற்கு என்றொருஏக்கம்.
உன்னதவாழ்வில் உயர்ந்த உத்தமர்கள்போல்
By Sumathy Gnanasegarஏமாற்றங்களைச் சந்திக்கும் துயரநிலையில்
ஏக்கங்கள் கரையை உடைக்கும்.
ஏணிப்படியான வாழ்வில் ஏறும்போது ,ஏறும்
ஏமாற்றங்களினால் நம்முள்வரும் ஏக்கங்கள்
ஏக்கங்கள் ஆலமரத்தின் விழுதுகள்தான்.
எதைப்பற்றினாலும் அடுத்தது தொடரும்.
ஏன்முடியாது எனும்கேள்விக்குப் பின்ஒருஏக்கம்.
என்னாலாகுமா எனும்ஏக்கம் என்பதுவரையும்.
ஏற்றமுடையோர் நிலைகண்டு எழும்ஏக்கம்
என்நிலைமாறுமா என்பதிலே வந்துநிற்கும்.
ஏற்றவழி கண்டும்துணை தேடிஒருஏக்கம்.
ஏமாந்ததுணையையும் ஏய்க்கஒரு ஏக்கம்.
இலட்சியம் இருந்தும் இலக்குக்காக ஏக்கம்.
இன்பம்இருந்தும் நிம்மதிக்கொரு ஏக்கம்.
அறிவிருந்தும் அன்பைத்தேடி ஒருஏக்கம்.
அன்பிருந்தும் அடைக்கலம்தேடி ஏக்கம்.
ஆசையிருந்தும் ஆன்மிகத்தில் ஒருஏக்கம்.
ஆசாபாசங்களிருந்தும் ஆண்டியாக ஏக்கம்.
எடைஉடைதனை சீராக்கும் தாக்கத்தில்
எண்சாண் உடம்பெதற்கு என்றொருஏக்கம்.
உன்னதவாழ்வில் உயர்ந்த உத்தமர்கள்போல்