Tamil Poems | Blank Thoughts

47. யாசிக்கிறேன் அருள்வாயா | PRAYING FOR GRACE


Listen Later

அமைதியில் துயில்கொள்ளும்

ஐயனே! - வாழ்வில்

அமைதியை வேண்டுகிறோம்.

அருள்வாயா?

செத்தபின் சேர்வதெங்கே

மாமணியே! - வீடுபேறு

கிடைக்க வேண்டுகிறோம்

அருள்வாயா?

யாக்கையை என்செய்வாய்

யாதவனே! - எரித்தோ

புதைக்காமலிருக்கவோ வேண்டுகிறோம்.

அருள்வாயா?

பங்கம் விளைவிக்காத

பரமேஸ்வரனோ பரமபிதாவோ

பாவிகள் எங்கள் - உடல்

அழுகாதிருக்க வேண்டுகிறோம்.

அருள்வாயா?

சமுத்திரத்தில் எறிந்தால்

மீனினத்தைப் பெருக்குவாய்

அவற்றிற்கு தீனியாக்க - வரம்

வேண்டிநிற்கிறோம்.

அருள்வாயா?

மண்ணிலே எறிந்தால்

வல்லூறுகளைப் பெருக்குவாய்

எம்முடல் உணவாக….

யாசகம் கேட்கின்றோம் - எம்

யாக்கையை பணயம்வைத்து!

யாசிக்கிறோம் வரம்அருள்வாயா?

...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar