Tamil Poems | Blank Thoughts

50. தூரிகையில்லா சித்திரங்கள் | BRUSHLESS ART


Listen Later

அலையில்லா கடல்போல்

அன்பில்லா மனம்போல்

நிலவில்லா வானம்போல்-இந்த

தூரிகையில்லா சித்திரமும்

துணிந்து பேசுகின்றது.

கற்பனை யில்லாதகனவுகள்

கண்முன்னே கணப்பொழுதில்

தோன்றி மறைக்கின்றன-அந்த

கற்பனைக் கனவிலும்ஒரு

கானகமே விரிகின்றது.

கானகத்தின் ஜீவன்களும்

கண்ணீரையே உறிஞ்சுகின்றன-காரணம்

தண்ணீருக்கு அங்குபஞ்சம்!

மலைமீதினின்றும் வீழும்அருவியில்

மூலிகைகள் பலகலந்துள்ளன.

மனிதவிழிகளினின்றும் விழும்

விழிநீர் அருவியில்

மூலக்கதைகள்பல பளிச்சிடுகின்றன.

சித்திரம் வரையஆசைதான்-ஆனால்

யார்தூரிகை வாங்கித்தருவார்?

கள்வனைக் காணவும்ஆசைதான்-ஆனால்

கண்டுபிடிக்க காவலர்எவர் வருவர்?

உண்மையையே பேசஆசைதான்-ஆனால்

எனக்குபதில் யார்உதைவாங்குவது?


...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar