Tamil Poems | Blank Thoughts

58. இனியபாத கைமலர்கள் | FLOWERS


Listen Later

சேவல்கள் கூவிட துயிலுணர்ந்தெழுந்து

செம்பனித் துளிகள் சிதறும்

புலர்காலை வேளை! நுண்மையான

புத்தம் புதுவாழ்வுக் காலையில்

தொழுவதற்குரிய புனிதக்கமலப்

பாதங்கள் இவை! - எனின்

தேவை இவைகளின் சேவை!

இவ்வெவனம் கையேந்தா திருக்க

எளியோர்தம் இதயம்தனில் வடியும்

குருதி யோட்டத்தை சீராக்க,

உள்ளங் கலங்கும் கண்களின்

நீரைத்துடைத்து மக்களை உவகையூட்ட,

கோடானுகோடி மக்களின் கண்களிட்ட

கோலநீரை வாரிவெளியேற்ற வந்த-இந்த

மென்மையான மலர்க் கரங்கள்

முனைந்து வந்து அணைக்கும்

அன்புக் கரங்கள்! வந்துநிற்கும்

இவர்தம் பாதங்கள்கூட பூஜைக்குரிய

இனிய பாதக் கைமலர்கள்!

...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar