
Sign up to save your podcasts
Or


சேவல்கள் கூவிட துயிலுணர்ந்தெழுந்து
செம்பனித் துளிகள் சிதறும்
புலர்காலை வேளை! நுண்மையான
புத்தம் புதுவாழ்வுக் காலையில்
தொழுவதற்குரிய புனிதக்கமலப்
பாதங்கள் இவை! - எனின்
தேவை இவைகளின் சேவை!
இவ்வெவனம் கையேந்தா திருக்க
எளியோர்தம் இதயம்தனில் வடியும்
குருதி யோட்டத்தை சீராக்க,
உள்ளங் கலங்கும் கண்களின்
நீரைத்துடைத்து மக்களை உவகையூட்ட,
கோடானுகோடி மக்களின் கண்களிட்ட
கோலநீரை வாரிவெளியேற்ற வந்த-இந்த
மென்மையான மலர்க் கரங்கள்
முனைந்து வந்து அணைக்கும்
அன்புக் கரங்கள்! வந்துநிற்கும்
இவர்தம் பாதங்கள்கூட பூஜைக்குரிய
இனிய பாதக் கைமலர்கள்!
By Sumathy Gnanasegarசேவல்கள் கூவிட துயிலுணர்ந்தெழுந்து
செம்பனித் துளிகள் சிதறும்
புலர்காலை வேளை! நுண்மையான
புத்தம் புதுவாழ்வுக் காலையில்
தொழுவதற்குரிய புனிதக்கமலப்
பாதங்கள் இவை! - எனின்
தேவை இவைகளின் சேவை!
இவ்வெவனம் கையேந்தா திருக்க
எளியோர்தம் இதயம்தனில் வடியும்
குருதி யோட்டத்தை சீராக்க,
உள்ளங் கலங்கும் கண்களின்
நீரைத்துடைத்து மக்களை உவகையூட்ட,
கோடானுகோடி மக்களின் கண்களிட்ட
கோலநீரை வாரிவெளியேற்ற வந்த-இந்த
மென்மையான மலர்க் கரங்கள்
முனைந்து வந்து அணைக்கும்
அன்புக் கரங்கள்! வந்துநிற்கும்
இவர்தம் பாதங்கள்கூட பூஜைக்குரிய
இனிய பாதக் கைமலர்கள்!