
Sign up to save your podcasts
Or


மனித மனங்கள் காயப்படுவதைத்தான் அவமானம் என்கிறோம்.
கத்தி... துப்பாக்கி... வெடிகுண்டு... அணு ஆயுதங்களைவிட மனிதர்களையும், மனித சமூகத்தையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கும், சக்திவாய்ந்த ஆயுதம் எது தெரியுமா? அவமானம்தான் அது.
வார்த்தைகளாலும், செய்கைகளாலும், ஏற்படுத்தப்படும் அவமானம்தான் மனிதர்களைச் சிதைத்துக் கொல்லும் சக்தி வாய்ந்த ஆயுதமாகக் கருதப்படுகிறது.
"வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்துகொள்ள தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது. வெற்றி என்றதும் பிறரால் அவமானப்படுத்துவது என்பதும் வரும். இது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துவிடும்.
எமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும்.
வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.
நம்மை அவமானப்படுத்த செயல்படும் பலபேர் இவைகளை மிக இரகசியமாகவே செய்கிறார்கள்.
வேறு யாரையாவது முன்னிறுத்தி பின்னால் நின்று இயக்குகிறார்கள். நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமை படத்தொடங்குகிறார்கள்.
அவர்கள் பொறாமை மிகுதியால் எம்மை அவமானப்படுத்துகிறார்கள்.
எப்போதும் வாழ்க்கையில் நம்முடைய சுற்றம் தான் எதிரிகள் எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை.
வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள் அவமானத்திற்கு அஞ்சாதீர்கள்.
அவமதித்தவர்களை மறந்துவிட வேண்டும். ஆனால் அவமானங்களை மறக்கக்கூடாது.
அதை அடுத்தடுத்த தளங்களுக்கான வெற்றிப் பயணத்தின் பாதையாக்கிக் கொள்ளவேண்டும்...
அவமானங்களை மறவாதீர் உங்கள் வெற்றிக்கான விதைகள் அவற்றில் உள்ளன”...
By Ramananமனித மனங்கள் காயப்படுவதைத்தான் அவமானம் என்கிறோம்.
கத்தி... துப்பாக்கி... வெடிகுண்டு... அணு ஆயுதங்களைவிட மனிதர்களையும், மனித சமூகத்தையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கும், சக்திவாய்ந்த ஆயுதம் எது தெரியுமா? அவமானம்தான் அது.
வார்த்தைகளாலும், செய்கைகளாலும், ஏற்படுத்தப்படும் அவமானம்தான் மனிதர்களைச் சிதைத்துக் கொல்லும் சக்தி வாய்ந்த ஆயுதமாகக் கருதப்படுகிறது.
"வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்துகொள்ள தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது. வெற்றி என்றதும் பிறரால் அவமானப்படுத்துவது என்பதும் வரும். இது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துவிடும்.
எமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும்.
வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.
நம்மை அவமானப்படுத்த செயல்படும் பலபேர் இவைகளை மிக இரகசியமாகவே செய்கிறார்கள்.
வேறு யாரையாவது முன்னிறுத்தி பின்னால் நின்று இயக்குகிறார்கள். நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமை படத்தொடங்குகிறார்கள்.
அவர்கள் பொறாமை மிகுதியால் எம்மை அவமானப்படுத்துகிறார்கள்.
எப்போதும் வாழ்க்கையில் நம்முடைய சுற்றம் தான் எதிரிகள் எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை.
வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள் அவமானத்திற்கு அஞ்சாதீர்கள்.
அவமதித்தவர்களை மறந்துவிட வேண்டும். ஆனால் அவமானங்களை மறக்கக்கூடாது.
அதை அடுத்தடுத்த தளங்களுக்கான வெற்றிப் பயணத்தின் பாதையாக்கிக் கொள்ளவேண்டும்...
அவமானங்களை மறவாதீர் உங்கள் வெற்றிக்கான விதைகள் அவற்றில் உள்ளன”...