யுத்த காண்டத்தில் ராமர் வானர சேனையுடன் கிஷ்கிந்தையிலிருந்து புறப்பட்டு தெற்குக் கடற்கரையை அடைவது, இலங்கையில் ராவணனுக்கு அறிவுரை சொன்ன தம்பி விபீஷ்ணன் ராவணனின் கோபத்துக்கு ஆளவது, விபீஷ்ணன் ராமரரிடம் வந்து சரணடைவது, கடலரசன் மீது ராமர் கோபத்தைவெளிப்படுத்துவது, கடலைக் கடந்து இலங்கை செல்லப் பாலம் கட்டுவது, இலங்கைக்கு வந்து சேர்ந்து போரைத் துவங்குவது, ராவணன் மகன் இந்திரஜித்தால் தாக்கப் பட்ட ராம லக்ஷ்மணர்களை கருடன் குணப்படுத்துவது, ராவணனின் தம்பி கும்பகர்ணன் போரில் மடிவது, இந்திரஜித்தால் மீண்டும் படுகாயப் பட்ட ராம லக்ஷ்மணர்களை குணப்படுத்த அனுமார் ஸஞ்சீவனி மூலிகை மலையைத் தூக்கி வருவது, லக்ஷ்மணன் இந்திரஜித்தைக் கொல்வது, ராமர் கடைசியில் பிரம்மாஸ்திரம் கொண்டு ராவணனை வதம் செய்வது, சீதையைத் தீக்குளிக்கச் செய்து அவளது தூய்மையை உலகுக்கு நிரூபிப்பது, அயோத்திக்கு புஷ்பகவிமானத்தில் எல்லாரும் திரும்பி வருவது, பதினான்காண்டு வனவாசம் முடிந்து வந்த ராமரை பரதன் வரவேற்பது, ராம பட்டாபிஷேகம் நடந்து மீண்டும் அயோத்தி மன்னராய் பொறுப்பேற்பது – ஆகியவை இடம்பெறுகின்றன.#tamilaudiobooks #valmikiramayanamaudiobook #ramayanamforkids #deepikaarun #sandeepika #ramaynamstories #ramayanam #spiritual #ramayana #kadhaiosai #chittukuruvi #chittukuruvipodcast