என்னிடமிருந்தும் இல்லாமல்.. துயரம் அழுந்தும்போது தோள்கள் இளகி வாகாக ஒரு நினைவைத் தாங்கிக் கொள்கின்றன நிபந்தனைகள் எதுவும் அவசியமாகவில்லை ஒரு நேர்க்கோட்டின் நடுவழியில் பதற்றத்தோடு உதறிச் செல்ல வைராக்கியம் மிக்க சொற்களை கைவசம் வைத்திருக்கிறேன் புடைத்து வீங்கிய சூழ்நிலைகளின் அசௌகரிய இடர்களை மீறி உருண்டு முனை மழுங்கிய அவமானங்களின் வெப்பம் அமிழ்கிறது தன்னிரக்கத்தின் குமிழ் உடைய மெல்ல மெல்ல தனிமையின் அடிமடியில் இன்னுமோர் முறை நீயுன்னையே அழைத்துப் பேசியிருக்கலாம் விடுபட்ட பாதையின் திசையில் நைந்து கிடக்கிறது ஒரு […]