கர்த்தரின் வார்த்தை நமக்கு ஆறுதல் அளிக்கின்றது, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள நம்மை தைர்யபடுத்தி பெலப்படுத்துகிறது. வேத வசனங்கள், சர்வவல்ல தேவனுடைய இருதயத்தை நாம் அறிந்துகொள்ள உதவுகின்றது. கர்த்தருடைய சித்தத்தின்படி வாழ நமக்கு உதவி செய்கின்றது. இந்த உலகத்தில் மனிதர்களிடம் அன்பு செலுத்த கற்றுக்கொடுக்கிறது. நம்மை நல் வழியில் நடக்க உற்சாகப்படுத்துகிறது.
தினமும் வேதத்தை வாசியுங்கள், அதின்படி நடக்கவும் பிரயாசப்படுங்கள். வேதத்தை வாசிக்கமுடியாத சூழ்நிலைகளில் வசனங்களை கேட்க பழகுங்கள். கர்த்தர் உங்களுடன் இந்த வசனங்கள்மூலம் பேசுவார். உங்களுக்கு ஒரு நல்ல தகப்பனாய், நண்பனாய்,ஆலோசகராய் உங்களை வழிநடத்துவார்.