#NNA_Podcast

LOCKDOWN சொல்லும் பாடம் - திருமந்திரம்


Listen Later

இந்த கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் நாம் பல வாழ்க்கையில் பாடங்களை கற்றுக்கொண்டம் ஆனால் அவை ஒன்றுமே அல்ல அதை தாண்டிய சில ஆழ உய்த்துணர்வு நமக்கு தேவை. நம் பூமித்தாய் நமக்கு இன்னும் ஏதோ தெரிவிக்க விரும்புகிறது அதை பற்றித் தான் இந்த காணொளியில் வழங்கி உள்ளோம் 

 -------------- 

பாடல் : #01

◼போது சடக்கெனப் போகின்றது கண்டும்

வாது செய்து என்னோ மனிதர் பெறுவது

நீதியுளே நின்று நின்மலன் தாள் பணிந்து

ஆதியை அன்பில் அறியகில்லார்களே

▪வாது - வாக்குவாதம், சூழ்ச்சி

▪நின்மலன் - ஆணவமலம் அற்றவன்

▪ஆதி - ஆதிகாலம் முதல் இருப்பவனாகிய இறைவன்

 ------------------------- 

பாடல் : #02

◼பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால்

உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார்

கொண்ட விரதமும் ஞானமும் அல்லது 

மண்டி அவருடன் வழி நடவாதே

▪பண்டம் - பொருட்கள் (material things)

▪பெய் - நிலம் கூரை - வீடு

▪பழகி - நண்பர்கள், உறவினர்

▪பெண்டிர் - மனைவி

▪விரதம் - ஒழுக்கம்

▪மண்டி - பணிந்து

 ------------------------ 

பாடல் : #03

◼ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டுச்

சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச்

சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே  

--------------------------------------------------------- 

Vera lvl content ku follow :  ▫️Telegram :   https://t.me/naannaanialla 

▫️ Instagram Content and Memes  : https://instagram.com/naan_naani_alla

 ▫️Whatsapp :  http://chat.whatsapp.com/FtrLwzukOMaJ... 

▫️ Spotify : https://open.spotify.com/show/5LXA1Km...

...more
View all episodesView all episodes
Download on the App Store

#NNA_PodcastBy #NNA SPIRITUAL NETWORK