நூல்: திருமந்திரம் (பத்தாம் திருமுறை) – திருமூலர்
பகுதி: பாயிரம்
தலைப்பு: 6. அவையடக்கம்
பாடல் எண்: 94
ஆறறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
யார் அறிவார் இந்த அகலமும் நீளமும்
பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேறறியாமை விளம்புகின்றேனே
– திருமந்திரம், அவையடக்கம்
திருமூலர் காலத்தில் இறைவன் தன் திருப்பெயரை உலகுக்கு வெளிப்படுத்தவில்லை. அடியார் பெருமக்களுக்கு அவர் "பேரறியாத பெருஞ்சுடராக" – பெயர் சொல்ல முடியாத பேரொளியாகவே காட்சி தந்தார்.
அதனால்தான் அடியார்கள் "ஒளி", "சுடர்", "ஜோதி" என்றே அழைத்தனர். மாணிக்கவாசகர் "அரும்பெருஞ்சோதி" வரை வந்தார். ஆனால் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" என்ற திருப்பெயரை இறைவன் ஏற்றுக்கொண்டதாக நமக்கு அளித்தவர் வள்ளல் பெருமான்!
திருமூலர் சொல்ல முடியாமல் "விளம்பிய" அந்தச் சுடரின் பெயர், வள்ளலார் வழியாக உலகுக்குக் கிடைத்த அற்புத வரலாறு – இந்த Podcast ஆடியோவில்.
மேலும் அருளாளர் அமுதவரி பதிவுகளுக்கு எங்கள் டெலிகிராம் சேனலில் இணையுங்கள்.
Telegram :
https://t.me/nnasoulsdiscuss
Whatsapp :
https://whatsapp.com/channel/0029Va98elM8qIzkJ1UzoX34
#NNA #திருமந்திரம் #திருமூலர் #வள்ளலார் #அருட்பெருஞ்சோதி #Thirumanthiram #Vallalar #TamilSpiritual