நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை ஒரே வாரத்தில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி மற்றும் மதப் பிரிவினைகள் தேச ஒற்றுமையைப் பாதிப்பதாகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழவே தான் இந்தச் சான்றிதழை பெற விரும்புவதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.