முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு ஆவி பிடித்தால் மிகவும் சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். இருமல், ஜலதோஷம், சளி தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி உள்ளவர்கள் அனைவரும் ஆவி பிடித்தால் நிமிட நேரத்தில் நோய்கள் பறந்தோடிவிடும். இதை காலை வேளையிலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் சிறிது நேரம் ஆவி பிடித்துவிட்டால் போதும் விரைவில் நோய் குணமாகும்.
மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்