திமுக கூட்டணி பங்கீடு: சிபிஐ, சிபிஎம் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பாராளுமன்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
=============
பிரதமர் மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், எனக்கு நினைவு தெரிந்த வயது முதல், என் பிறந்தநாளான மார்ச் 1-ம் நாளன்று தலைவர் கலைஞரையும், தாயார் தயாளு அம்மாவையும் வணங்கி வாழ்த்துகள் பெறுவதே என் முதல் கடமையாக இருக்கும். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார். தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.