அயோத்தியே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு நோக்கினாலும் தோரணங்கள், மகிழ்ச்சி ஆராவாரங்கள், ஆனந்த களிப்புடன் சிரிப்புகள். இருக்காதா பின்னே? ராமனுக்கு முடிசூட்டு விழா. நாடிழந்து காட்டிற்கு சென்றவன். காட்டில் மனைவியை பிரிந்து மனத்துயரில் ஆழ்ந்தவன். வலிமை மிகுந்த ராவணனை வென்று, இதோ இந்த கணம் வெற்றி செய்தியோடு நாடு திரும்பி இருக்கிறான். தவறிப்போன மணி மகுடம், அவனை அலங்கரிக்கப் போகிறது.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்