புராணங்களில் சிவனுக்கு பல அவதாரங்கள் இருந்தது குறித்து அறிந்திருப்போம். ராஜஸ்தானில் இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் சிவலிங்கத்தை சுற்றி பல அற்புதங்கள் நிகழ்கிறதாம். இங்கு ஒரு நாளில் மூன்று முறை சிவன் நிறம் மாறுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அச்சலேஸ்வர் கோவில் பல நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு குடிகொண்டிருக்கும் சிவனை மக்கள், அச்சலேஸ்வர் மகாதேவ் என்கிறார்கள். இந்தக் கோவிலில் நந்தி சிலையும் வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள கோவில்களை சுல்தான்கள் தாக்கியபோது, நந்தி சிலை ஆயிரக்கணக்கான தேனீக்களை படையெடுப்பாளர்கள் மீது அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்