சிவபெருமானின் பக்தனாக மாறியிருந்த அந்த சூதாடி, இந்திரனிடம் இருந்த ஐராவதம் என்ற யானையை, அகத்தியருக்கு தானமாக அளித்தான். முன்னொரு காலத்தில் சூதாடி ஒருவன் இருந்தான். அவன், சூதாடுவதன் மூலம் பணம் ஈட்டியதோடு, அனைத்து கெட்ட பழக்கங்களும் கைவரப்பெற்றவனாக இருந்தான். அதோடு இறைவனையும், சாதுக்களையும் அவதூறாக பேசி வந்தான். ஒரு நாள் அவனது தந்திரத்தால், சூதாட்டத்தில் பெரும் பணம் ஈட்டினான். அதனால் மகிழ்ச்சி அடைந்தவன், சந்தனம், மாலை ஆகியவற்றுடன் விலைமாதுவின் வீட்டை நோக்கிப் பயணப்பட்டான். மது போதை காரணமாக கால்கள் தள்ளாட நடந்தவன், ஓரிடத்தில் கால் இடறி கீழே விழுந்து நினைவிழந்தான்.
இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்