எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான சுவக்கீன், அவரது மனைவி அன்னம்மாள் இருவரும் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர்.[3] இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பை அவர்களுக்கு முன்னறிவித்தார். அதனால் மனம் மகிழ்ந்த இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு மரியா என்று பெயரிட்டனர்.
இன்று (செப்டம்பர் 8) அந்த கன்னி தாயின் பிறந்தநாள். பலகோடி மக்களின் விண்ணப்பத்தை கேட்டு அதை நிறைவேற்றி வைத்தாள். கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் அன்போடு வேண்டிக்கொள்ளும் ஒரு தாயாக வீற்றியிருக்கிறாள். ஒவ்வொரு இடத்திலும் அவளை போற்றும் வண்ணம் "மரியே வாழ்க" என்ற கோஷம் எழுப்பி மாதாவை வேண்டிகொண்டனர்.
இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்