’என்னைத் தேடி வந்துவிட்டீர்களென்றால், உங்கள் துக்கங்களையெல்லாம் நான் பார்த்துக்கொள்வேன். அந்த துக்கங்களெல்லாம் என் பொறுப்பு’ என அருளியுள்ளார் சாயிபாபா.
இதேபோல், பாபாவுக்கு மிகப்பிடித்த இன்னொரு இனிப்பு... கற்கண்டு. இனிப்பைக் கொண்டு பாபாவுக்குப் படையலிட்டு, நம் பிரார்த்தனையை வைக்கவேண்டும்.
பூஜித்து முடித்ததும் பழங்களையும் இனிப்புகளையும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் அக்கம்பக்கத்தாருக்கும் வழங்கவேண்டும்.
மிக எளிமையான வழிபாட்டையே விரும்புகிறார் பாபா. பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நம்மால் என்ன முடியுமோ அதை நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை பிறருக்கு விநியோகிக்கலாம். அந்த அன்பையும் பக்தியையும் மட்டுமே பார்த்து, நம் துயரங்களைப் போக்க ஓடிவருகிறார் பாபா
இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்