யார் மேலயோ இருக்குற வருத்தம், கோபம், சங்கடம், இழப்புக்காக நம்மை நாமே துன்பத்தில் ஆழ்த்திக்கிற தன்னை தானே தண்டிச்சுக்கிற தன்மை நம்ம எல்லோர்கிட்டயும் உண்டு. காதல் தோல்வியில் தொடங்கி தனிமை, அன்புக்கான ஏக்கம்னு இதற்கு பல காரணங்கள் உண்டு. அப்படிப்பட்ட மனிதர்களோட கதைகள் ஏராளமாக உண்டு. நாவல், சிறுகதை, திரைப்படங்கள்னு நிறையவும் பதிவு செய்யப்பட்டிருக்கு.
அப்படிப்பட்ட ஒரு பொண்ணோட கதைதான் மரி என்கிற ஆட்டுக்குட்டி. பிரபஞ்சன் எழுதின ஒரு க்ளாஸிக் சிறுகதை. இதை வெறும் கதையா நினைக்கவே முடியாது இது ஒரு தெரபி! பல நூறுமுறை படிச்ச கதை இது. இதன் ஒவ்வொரு வரியும் மனசுல எப்பவும் தங்கி இருக்கும். இன்னைக்கு நம்ம நீயே ஓளி பாட்காஸ்ட்ல அந்த கதையை பத்தியும் பிரபஞ்சன் எனும் மெய்யழகன் பத்தியும்தான் பேசிருக்கேன்.