
Sign up to save your podcasts
Or


வைரமுத்து சொர்ணலிங்கம் கனேடியத் தமிழ் சமூகத்தின் மத்தியில் நன்கு அறிமுகமான ஒரு பெயர்.
பல தளங்களில் இயங்கி வரும் ஒரு ஆளுமை
Yarl Metal உருக்கு உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்கி அதனை வெற்றிகரமான ஒரு நிறுவனமாக மாற்றிய தொழில் முனைவாளர்.
தாயகத்தில் தனது சொந்தக் கிராமமான உடுப்பிட்டியில் Valvai Garments என்ற ஆடை உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவி அதன் மூலம் தாயக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வசதியேற்படுத்தி கொடுத்துள்ள சமூக செயற்பாட்டாளர்.
எமக்கான ஒரு இசை வடிவம் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஒரு இசைக் காதலர். நமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சியாக இசையரங்கம் எனும் இசை நிகழ்ச்சியை வருடா வருடம் நடத்தி புதிய கலைஞர்களுக்கு அடையாளம் தேடித் தருகின்றவர். இந்த நிகழ்ச்சிக்காக உருவாக்கப்படும் பாடல்களை இசைத் தொகுப்புகளாகவும் அவர் வெளியிட்டு வருகின்றார்.
ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக. சமூக சிந்தனை கொண்ட ஒரு சிறந்த சமூக செயற்பாட்டாளராக நமது கலைஞர்களுக்கு களம் தரும் ஒரு கலையார்வலராக பல முகங்கள் கொண்ட ஒரு பன்முக ஆளுமைமையாக வைரமுத்து அவர்களை இன்றைய அடையாளத்தின் மூலம் சந்திப்பதில் பெரு நிறைவடைகின்றோம்.
By Ramananவைரமுத்து சொர்ணலிங்கம் கனேடியத் தமிழ் சமூகத்தின் மத்தியில் நன்கு அறிமுகமான ஒரு பெயர்.
பல தளங்களில் இயங்கி வரும் ஒரு ஆளுமை
Yarl Metal உருக்கு உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்கி அதனை வெற்றிகரமான ஒரு நிறுவனமாக மாற்றிய தொழில் முனைவாளர்.
தாயகத்தில் தனது சொந்தக் கிராமமான உடுப்பிட்டியில் Valvai Garments என்ற ஆடை உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவி அதன் மூலம் தாயக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வசதியேற்படுத்தி கொடுத்துள்ள சமூக செயற்பாட்டாளர்.
எமக்கான ஒரு இசை வடிவம் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஒரு இசைக் காதலர். நமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சியாக இசையரங்கம் எனும் இசை நிகழ்ச்சியை வருடா வருடம் நடத்தி புதிய கலைஞர்களுக்கு அடையாளம் தேடித் தருகின்றவர். இந்த நிகழ்ச்சிக்காக உருவாக்கப்படும் பாடல்களை இசைத் தொகுப்புகளாகவும் அவர் வெளியிட்டு வருகின்றார்.
ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக. சமூக சிந்தனை கொண்ட ஒரு சிறந்த சமூக செயற்பாட்டாளராக நமது கலைஞர்களுக்கு களம் தரும் ஒரு கலையார்வலராக பல முகங்கள் கொண்ட ஒரு பன்முக ஆளுமைமையாக வைரமுத்து அவர்களை இன்றைய அடையாளத்தின் மூலம் சந்திப்பதில் பெரு நிறைவடைகின்றோம்.