பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி.
திணை: வஞ்சி.
துறை: கொற்ற வள்ளை.
சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்.
திணை: வஞ்சி. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டுடன் வீரர்கள் வஞ்சிப்பூவைச் சூடிப் போரிடுவது வஞ்சித் திணை ஆகும்.
துறை: கொற்றவள்ளை. கொற்றவள்ளை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "கொற்றம்" என்பது வெற்றியைக் குறிக்கும். வள்ளை என்பது ஒரு பாடல் வகை, பெண்கள் நெல் குற்றும்போது தலைவனைப் புகழ்ந்து பாடுவது. எனவே, போரில் வென்ற அரசனைப் புகழ்வதையும், பகைவர் நாடு அழிவதற்காக வருந்துவதையும் பொருளாகக் கொள்ளும் இத்துறை "கொற்ற வள்ளை" எனப்பட்டது.