பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
திணை: பாடாண்.
துறை: வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.
சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி.
பாடுதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண்திணை எனப்படும்.
துறை: தேசத்தைக் காப்பது குழந்தையைப் பாதுகாப்பது போன்றது என்பதால் இது செவியறிவுறூஉ துறையென்றும், அருளையும், அன்பையும் நீக்கி பாவச்செயல்கள் செய்து நீங்காத நரகத்தை தமக்கு இடமாக்கிக் கொள்ளும் நல்லறிவில்லாத தாழ்ந்தோருடன் சேராது நீ இருக்க வேண்டும் என்பதால் இது பொருண்மொழிக் காஞ்சி துறையென்றும் கொள்ளலாம்.