இப்பாடல் பாடாண்திணை யாகும்.
துறை: நகர்வலஞ் செயற்குப் பணியரென வீடும், ஏந்துகை யெதிர் இறைஞ்சுக என அறமும், புகையெறித்தலான் வாடுகவெனப் பொருளும், முகத்தெதிர் தணிக என இன்பமும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்கவென அரசியல் கூறப்படுதலால் இது செவியறிவுறூஉம் துறையாகும். மதியமும் ஞாயிறும் போல மன்னுக என்றதனால் வாழ்த்தியல் என்ற துறையுமாகும்.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் பெறுக என வாழ்த்துவது சான்றோர்க்கு இயல்பாதலால், காரிகிழாரும் முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியற்கு, பணிக என்பதனால் வீடும் இறைஞ்சுக என்பதனால் அறமும், வாடுக என்பதனால் பொருளும் தணிக என்பதனால் இன்பமும் பெற வாழ்த்தினார்.