முதல் சந்திப்பு :
தமிழகத்தில் நடுத்தர குடும்பங்கள் தங்கள் வாழ்வின் அடுத்த பரிமானத்துக்காக உழைக்க தொடங்கிய ஆண்டுகள் அவை, பல நடுத்தர உழைப்பாளிக் குடும்ப தலைவர்களும் தங்கள் மகன்/ மகள்களை ஆங்கில வழியில் தான் பயில வைக்க வேண்டும் ; அதுதான் வருங்காலம் என்று உணர தொடங்கிய நூற்றாண்டு.
கடுமையான உழைப்பை மட்டுமே நம்பி கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு சென்று தான் அவனை படிக்க வைத்தார்கள்.
அவனும் முயலாமல் இல்லை, ஏதோ முயன்று கொண்டு தான் இருந்தான்.
பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றும் பள்ளிக்கு காலாண்டுக்கான கல்வி கட்டணம் கட்ட 10 நாட்கள் கூடுதல் கெடு கேட்காத வருடமே இல்லை.
அப்பொழுதெல்லாம் பள்ளி கட்டணம் 300 ரூபாய் தான்.
வீட்டில் இருந்த காலனாவை எடுத்து பக்கத்து வீட்டு பொட்டி கடையில் சூடகல்ல மிட்டாய் வாங்கியுண்டதற்காக வீட்டு வாசலில் கட்டி வைத்து அடித்த அப்பா.
ஏதேனும் தவறு செய்தால், யாரு புள்ள ? அந்தாலு மாரித்தானே இருக்கும் புத்தி என்று திட்டி, நல்லொழுக்கத்திற்கு பெயர் வாங்க, என் புள்ளையாச்சே என்று சொன்ன அம்மா.
இப்படி சாதாரண வழக்கசாலியாகத்தான் அவனும் வளர்ந்தான்.
பத்தாப்பு எழுதாத அம்மாக்கு அவ மொவன் இங்கிலீஷ் மீடியம் தான் படிக்கணும். நீ இந்த குடும்பத்துக்கு வாக்கப்பட்டா நடுரோட்டில நிப்பன்னு சொன்னவங்க முன்ன வாழ்ந்து காட்டனும்.
அவ்ளோதான், அப்படி தான் அவளோட இலக்குகள் நிர்ணயிக்க பட்டது.
இலக்க நோக்கி ஓட தொடங்குனா, இப்போ வரைக்கும் ஓடிக்கிட்டு இருக்கா.
ஓட பழகிய கால்கள் இலக்குகளை அடைந்த பின்னும் களைப்படைவதில்லை ; இலைப்பாருவதுமில்லை.
தொடக்க பள்ளியில படிக்கிறப்போ, அஞ்சாப்பு தான் பெரிய படிப்புன்னு அதை வேகமா அடைய ஆச பட்டு, அஞ்சாபோட எல்லாம் முடிஞ்சுதுன்னு நெனச்சு பள்ளியோடம் போன கூட்டத்துல அவனும் ஒருத்தவன்.
பள்ளிக்கூடம் பக்கமே வீடு இருந்து, தான் புள்ளைக்கு சுட சுட சோறூட்ட வந்த பவித்ரன் அம்மா, ஜெனிபர் அம்மா, பரணிக்கா அம்மா, சரண்யா அம்மான்னு வந்தவங்க அவன் வயித்துல மூட்டுன சூடு, அவங்க வீடு தோசை கல்லு நெனச்சும் பாத்துருக்காது.
அதையெல்லாம் பாத்தும் பாக்காம, சாப்பாட்டு டப்பாவ திறந்து, கொழ கொழத்த கோதுமை தோசைய டப்பாவோட கூர்மையான மொனைல வெட்டி வெட்டி துணுக்கு துணுக்கா டப்பாவ சுத்தி சிந்தி, முழுசா சாப்பிட்டதா கார்த்திகா மிஸ் கிட்ட தப்பிச்ச நாட்கள், அவன் அம்மாக்கு எப்படியும் தெரிஞ்சுருக்காது.
போனது போகட்டும்னு பக்கத்து வீட்டு ரேவதி அக்கா, கடைசீ வீட்டு பிரபா அக்கான்னு ரெண்டு பேரும் அரசாங்கம் இலவசமா குடுத்த சைக்கிள்ல ஸ்கூல் போக அவங்க கூடவே ஒரு பி.எஸ்.ஏ சாம்ப் சைக்கிள எதிர்காத்துல மிதிச்சுட்டு அச்சுதமங்களம் சட்டரஸ் கடக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகும்.
அதையும் மீறி வீட்டுக்கு போயி சேர்ந்தா, வீட்டு சாவி சித்ரா அக்கா வீட்ல இருக்கும்.
அப்பறம் சித்ரா அப்பாக்கு சுருட்டு வாங்கிட்டு வந்து குடுத்துட்டு சாவியை போட்டு வீட்டை திறந்து உள்ள போயி, பழைய பிளாக் & ஒயிட் TV ல நிவேதா தாமஸ் சின்ன புள்ளையா நடிச்ச மை டியர் பூதம் பாத்த நாட்கள் சத்தியமா திரும்ப வரப்போறது இல்ல.
இதையெல்லாம் மீறி, பள்ளிக்கூடம் பக்கமே வீடு இருந்தா என் புள்ள உண்ணம் நல்லா படிபப்பான் நெனச்சு, அவங்க அண்ணன் அவரு பொண்ணோட படிப்புக்காக தனி ஜாகை போவையில, தன் பிள்ளையையும் அங்கேயே அனுப்பி வச்சா அவுங்க அம்மா.
அங்க போனா, காலைல ஒரு 2 மணி நேரம் டியூஷன், சாயங்காலம் 2 மணி நேரம் டியூஷன்னு, நுனிக்காத கில்லுற பெரிய சாருக்கு பயந்து ஓட்டுன ஒவ்வொரு நிமிடங்களும் avengers assemble சீன் தான்...
அந்த டியூஷன முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா, 3 மணிநேரம் மின் வெட்டு, இருட்டான இனிமையான நேரங்கள்னு தான் சொல்லனும்.
கரண்டு வந்தோன படிச்சுக்கலாம்னு சாயங்காலம் 6 லேர்ந்து 9 மணி வரைக்கும் வீட்டு வாசல்ல ஒக்காந்து அக்கம் பக்கத்து வீட்டு சின்ன பசங்கல்லாம் அடிச்ச கூத்து...
சாவுருத்துக்கு முன்ன கரண்ட் போனாலும் நெனப்புல இருக்கும்.
காதலோ, காவியமோ, நட்போ, எதிர்ப்போ எல்லாமே சில குழப்பங்கள்ல தான் ஆரம்பிக்கும்.
அப்படி தொடங்குன ஒரு நட்பு எப்படி காதலா மாற தொடங்குச்சு ?
அது மாரிச்சா இல்லையா ?
அடுத்த episode ல பாப்போம்...