இசையும் காலம் மனமெங்கும் அலையத் தொடங்கும் யோசனையின் கால்கள் ஒவ்வொன்றும் காலத்தின் வெவ்வேறு தொடர்ச்சிக்கு இழுத்துப்போகிறது சொல் முந்த வழித் திறந்த காலம் இறவாப் பொழுதாகிக் கனக்கிறது நிகழும் மௌனத்தை எடையேற்றி நியாபகத்தின் பொத்தலில் நிறையும் கணக்கற்ற நானுக்கோ தந்துதவ நல்ல சொல் தேடித் தேடி ஓடுகின்ற கால்கள் ஒயுமிடம் மாயும் மனம் எங்கு உண்டு நானின் வளையா நான் மூங்கில் மனம் உடைத்துத் துளையிட்ட விசையில் இசையும் பொழுதால் நிகழ்கிறது ஓயும் காலுக்கான காத்திருப்பு.. […]