KRISHAK

The Legend 140(4)


Listen Later

நல்ல நாளில், நல்ல நேரத்தில் ஈசான சிவ பண்டிதரை முன் நிறுத்தி தன்னை சோழதேசத்து சக்ரவர்த்தியாக பிரகடனம் செய்து கொண்டார். அது மட்டுமல்லாதும் உடனடியாய் உடையார்குடிக்கு ஸ்ரீ முகம் அனுப்பினார். ரவிதாஸனையும் பரமேஸ்வரனையும் துரோகிகள் என்று சொல்லி அவர்களுடைய பெண்டுகளையும், குழந்தைகளையும் பெற்றோர்களையும், அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, பெண் கொடுத்தவர்களையும், பெண் கொடுத்த வேட்டகத்தார்களையும் உடனடியாய் சகல உறவுகளையும் துறந்துவிட்டு ஊர்விட்டுப் போக வேண்டுமென்று கட்டளையிட்டார். அந்த நிலங்களுக்கு ஒரு விலை போட்டு அதற்குண்டான காசை கிராமத்தினரே கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லி தனியாக ஒரு மூட்டை பொற்காசு அனுப்பினார்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

KRISHAKBy MS Yuvaraj