சந்தோஷமா இருங்க. நிறைய சிரிங்க.பிடிச்ச ட்ரெஸ்ஸ வாங்கிக்கங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் கிட்ட போய் உங்களுக்கு அவங்களை எவ்ளோ பிடிக்கும்னு சொல்லுங்க.
கடைசியா உங்க அப்பா அம்மாவைப் பார்த்து எப்ப' ஐ லவ்யூ'ன்னு சொன்னீங்க. போய் சொல்லுங்க அவங்களும் சிரிப்பாங்க. சந்தோஷப்
படுவாங்க.
அன்புங்கற விஷயம் உலகத்துல எவ்வளவோ மாயங்களை செஞ்சிருக்கு. ஒருசிலபேர் அன்பை கோபமா காண்பிக்கலாம். ஒருசிலபேர் அன்பை சோகமா காண்பிக்கலாம். ஆனா அன்புங்கற விஷயம் இல்லாட்டி உலகம் ஓடவே ஓடாது.
உலகத்தில நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடைசியா தூங்கறக்கு முன்னாடி 'எப்படி இருந்துச்சு இன்றைய நாள்'னு கேக்க ஒருத்தர் தேவை.
ஒண்ணு ஞாபகம் வச்சுக்க நண்பா! நீ பொறந்தது பாதியில மூழ்கறக்கில்லை. கெட்டியா புடிச்சிக்க.
உன்னோட வாழ்க்கைக் கதையும் ஒருநாள் சரித்திரமாகும்!
- *ஸ்ரீமன் ஆதித்*
டிஸ்ஜாயிண்டட்