பெண் குழந்தைகளுக்கு அதிகாரம், போதியக் கல்வி, நல்ல சுகாதாரம், பாலின பாகுபாடற்ற அக்கறை ஆகியவற்றை வழங்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2008 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு தோறும் இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ,ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும். மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது .
பெண் குழந்தை நாள் கொண்டாடப்படுவதின் நோக்கம்
மக்கள் மற்றும் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு
சம வாய்ப்பு மற்றும்
சம உரிமை கிடைப்பதை உறுதிசெய்வது .
பாலின சமநிலை மேம்படுத்துவது .
பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை கிடைப்பதை உறுதி செய்வது
போன்றவை ஆகும்.