01 வீடு திரும்பல் சூன்யத்துள் அலைந்து திரிந்து அலுத்த சுடர் விளக்கேற்றும் போதெல்லாம் திரி நுனியில் இளைப்பாற அமருகிறது பசலையில் தவிக்கும் சூன்யம் காற்றைத் தூதனுப்ப அலைந்து அலைந்து சமரசம் இவர்களின் ஊடலுக்கிடையில் அலைவுறுகிறோம் நானும் அறையும் சகலமும் 02 அற்பப் பிறவி மென்தூரலாய்த் துவங்கி அடைமழையின் சாயலை வரிந்து கொண்டபோது ஈரமாதலுக்குத் தயங்கி எதிரெதிராய் அண்டி நின்றிருந்த அத்தனை கண்களும் நிலை கொண்டது சாவதானமாய் நனைந்து கொண்டே நடந்த வீதியோர நாயொன்றின் மீது இருபுறமும் அப்போது […]