* நீங்கள் வியாதிப்பட்டு பெலவீனமாயிருக்கிறீர்களா?
* ஓவ்வொரு நாளும் உட்கொள்ளும் மருந்துகளினிமித்தம் நீங்கள் சோர்ந்துபோனீர்களோ?
* குணமடைவதற்கான அறிகுறி ஒன்றும் இல்லாமல் மிகமோசமாய் நலிவடைந்தீர்களோ?
*உங்கள் வாழ்க்கை முறையைச் சற்றுப் பரிசோதித்துப் பாருங்கள்.
* நம்முடைய சரீரம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம்.
* அநேகவேளைகளில் இந்தச் சரீரத்தை ஒழுங்காகப் பராமரிக்காததினிமித்தமே நாம் வியாதிப்படுகிறோம்.
* உங்களுடைய (நடைமுறை) வாழ்வியல்முறை எப்படி இருக்கிறது?
* நீங்கள் சரியான நேரத்தில் சத்து நிறைந்த உணவு உட்கொள்ளுகிறீர்களா? அல்லது கட்டுப்பாடேதுமின்றி ஆரோக்கியமற்ற உணவுகளால் உங்கள் வயிற்றை நிரப்புகிறீர்களா?
* நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தி, தேவையான ஓய்வையும் கொடுக்கிறீர்களா?
* சரியான முடிவுகளை எடுங்கள். உங்கள் சரீரத்தை துர்ப்பிரயோகம் செய்து புறக்கணித்ததற்காக தேவனிடத்தில் மன்னிப்பைக் கேளுங்கள்.
* அவர் உங்களை மன்னித்து சுகமாக்குவார்