——- ———————-அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தா பீடம் நடாத்தும் மகரஜோதிப் பெருவிழாவின் 39 ஆவது நாள் 24-12-2020.வியாழக்கிழமை தொடக்கம் ஜனவரி 1ம் திகதி 2021. வெள்ளிக்கிழமைவரை ஒன்பது நாட்களுக்கு சுவாமி ஐயப்பனை ஜோதிவடிவாகக் காணுகின்ற விஷேட திரவ்ய ஹோம மஹாயாகம். சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் சிறப்பாக நடைபெறத் திருவருள் கூட்டியுள்ளது ...முதலாம் நாள் மஹாபூஜை 24-12-2020. வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட திரவ்ய ஹோமத்தில் 108 வகை மூலிகைகள் , தான்யங்கள் ,சமித்துவகைகள் ,பழவகைகள் ,18 பூர்ணாகுதி. அஷ்டாதச உபசார ஹோமங்கள் ,வஸுதாரா ஹோ ம் ,மஹாபூர்ணாகுதி அஷ்டபலிபூஜை .ஹரிவராசனம் என்பன சிறப்பாக நடைபெற்றது. ... கடந்த 40.ஆண்டுகளாக சபரிமலைஶ்ரீசாஸ்தா பீடத்தில் மகரஜோதிப் பொருவிழா சிறப்பாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது
உலகமக்கள் நலம்பெறவேண்டியும். அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ.,மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் .,சுகாதார உத்தியோகஸ்தர்கள் , வைத்தியர்கள் ,தாதிமார்கள் ,பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பொதுஜன ஊடக அதிகாரிகள் அனைவருக்கும் இறை ஆசிவேண்டி மஹாயாகத்தில் விஷேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. நேற்று ஆரம்பமான விஷேட மஹா பூஜையில். முன்னாள். இந்துசமய கலாசார அமைச்சர். நாடாளுமன்ற உறுப்பினர். மனோ கணேசன் கலந்து இறைவழிபாட்டில் ஈடுபட்டு அனைத்து மக்களும் வைரஸ்நோயிலிருந்து விடுபட்டு இயல்புவாழ்வு வாழ . முன்னாள் அமைச்சர் மனோகணேசன் ஐயப்பசுவாமியைப் பிரார்த்தனை செய்து கொண்டார் ..மனோகணேசனுக்கு சபரிமலைக் குருமுதல்வர் குருபீடாதிபதி. காளாஞ்சி வழங்கி ஆசீர்வதித்தார் ..........மேற்படி மஹாயாகத்தில் சகல அன்பர்களும். உங்கள் பெயர் நக்ஷத்திரங்களை. கீழ்க்காணும் வாத்ஸப் இலக்கத்திற்கு அனுப்பிவைத்தால் உங்கள் பெயர்கள். குடும்பத்தவர்கள் பெயர்களும் மஹா யாகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உங்களுக்காகவும் பிரார்த்திக்கப்படும் ..என சபரிமலைக் குருமுதல்வர் ஶ்ரீஐயப்பதாஸக் குருக்கள் தெரிவித்துள்ளார்கள் ...,,,,..,