Arunagirinathar's Thirupugal. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
தோரண கனக வாசலில் முழவு
தோல்முர சதிர ...... முதிராத
தோகையர் கவரி வீசவ யிரியர்
தோள்வலி புகழ ...... மதகோப
வாரண ரதப தாகினி துரக
மாதிர நிறைய ...... அரசாகி
வாழினும் வறுமை கூரினு நினது
வார்கழ லொழிய ...... மொழியேனே
பூரண புவன காரண சவரி
பூதர புளக ...... தனபார
பூஷண நிருதர் தூஷண விபுதர்
பூபதி நகரி ...... குடியேற
ஆரண வனச ஈரிரு குடுமி
ஆரியன் வெருவ ...... மயிலேறு
மாரிய பரம ஞானமு மழகு
மாண்மையு முடைய ...... பெருமாளே