க.நா.சுவின் எல்லா நாவல்களுமே படு சுவாரஸ்யமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க.நா.சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக் கூடியதாகவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க.நா.சுவின் நாவல்கள்.