கடவுளை வணங்குவதால் மன அமைதி கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் கடவுள் பக்தி என்பது எப்படிப்பட்டது என்பதில்தான் அந்த சூட்சுமம் அடங்கியிருக்கிறது. ஒரு ஊரில் மிகப்பெரிய பணக்காரரும், செருப்பு தைக்கும் ஏழை தொழிலாளியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவருமே இறைவனை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். வழிபடுவதில்தான் அவர்களுக்குள் வேறுபாடு இருந்தது.
ஒரு நாள் நாரத முனிவர், மகாவிஷ்ணுவிடம் “பெருமாளே... அந்த செல்வந்தர் பல மணி நேரம் பூஜை செய்கிறார். உங்களை வழிபடுகிறார். பக்திமானாக இருக்கிறார். ஆனால் அவரால் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதே நேரம் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பணம் இல்லாவிட்டாலும் நிம்மதியாக இருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் உங்களுடைய படத்தை வைத்து ஒரு முறைதான் வணங்குகிறார். இதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.
உடனே அந்த செல்வந்தர், “இப்போது நாராயணர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நாரதர், பெருமாள் சொல்லி அனுப்பியது போலவே, “நாராயணர், ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார். அதைக் கேட்ட செல்வந்தர், “அது எப்படி முடியும்?. இதெல்லாம் நடக்கிற காரியமா?” என்று நாரதரிடம் கேட்டார்.
இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்