மற்றவர்களுக்கு என்ன தேவையோ அல்லது எது சொன்னால் அவர்களுக்கு புரியுமோ, அதை மட்டும்தான் சொல்ல வேண்டும். புரியாத விஷயங்களை மெனக்கிட்டு சொல்றது, நம்மைதான் முட்டாளாக்கும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். அந்த ஊரில் மிகவும் பிரபலமான ஒரு குரு இருந்தார். அவர் முற்றும் துறந்த முனிவர். அனைத்து சாஸ்திரங்களையும், வேதங்களையும், புராணங்களையும் கரைத்துக் குடித்தவர். அவரை ஒரு ஊரில் பிரசங்கம் செய்வதற்காக அழைத்திருந்தனர். கூட்டத்திற்கு எப்படியும் 10 ஆயிரம் பேராவது வருவார்கள் என்று அந்த ஊர் பெரியவர்கள், நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
மழையின் காரணமாக அங்கே தண்ணீர் குளம்போல் தேங்கியிருந்தது. கூட்டத்தை இனி நடத்த முடியாது என்ற நிலையைக் கண்டதும், குருவுக்கு பெரிய ஏமாற்றம். ‘இங்கே குதிரைக்காரன் மட்டும்தான் இருக்கிறான். அவன் ஒருவனுக்காக நாம் பிரசங்கம் செய்ய வேண்டுமா?’ என்று நினைத்தார். பின்னர் குதிரைக்காரரை நோக்கி, “இப்போது என்னப்பா செய்வது?” என்று கேட்டார், குரு.
ஒரு வழியாக பிரசங்கம் முடிந்தது. உடனே குதிரைக்காரரைப் பார்த்து, “எப்படியப்பா இருந்தது என் பேச்சு”ன்னு பெருமை பொங்க கேட்டார், குரு. “ஐயா.. நான் குதிரைக்காரன். எனக்கு எதுவும் தெரியாது. ஆனா ஒன்று.. நான் புல்லு வைக்கப்போற இடத்திலே ஒரு குதிரைதான் இருக்கிறது என்றால், அதுக்கு மட்டும்தான் புல்லு வைப்பேன். 30 குதிரைக்கான புல்லையும் அந்த ஒரே குதிரைக்கே கொட்டிட்டு வந்துவிட மாட்டேன்..” என்றார், அந்த குதிரைக்காரர்.
இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்