முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதனை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பார்கள். சட்டென்று பின்வாங்க மாட்டார்கள். திட்டமிட்டபடி செயல்பட முடியாத சூழலின்போதும், எதிர்பாராத நிகழ்வுகள் மனதை உலுக்கும்போதும் மன அழுத்தம் ஆட்கொண்டுவிடும். எப்போதாவது மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதில் இருந்து விரைவாக மீண்டுவிட்டால் பிரச்சினை இல்லை. அடிக்கடியோ, தொடர்ந்தோ மன அழுத்தத்திற்கு ஆளானால் மன ஆரோக்கியம் மட்டுமின்றி உடல் நலனும் பாதிப்புக்குள்ளாகும். ஆரம்ப நிலையிலேயே மன அழுத்தத்திற்கு வித்திடும் அறிகுறிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
1. உடல் வலி மன அழுத்தம் தசைகளை பாதிக்கும். மன அழுத்தம் நாள்கணக்கில் நீடிக்கும்போது தசைகளில் வலியை உண்டாக்கும். அதனால் உடல் முழுவதும் வலி, சோர்வு ஏற்படும்.
2. தலைவலி மன அழுத்தத்தின் தாக்கமாக ஏற்படும் பாதிப்பை நீக்க மூளைக்கு சமிக்ஞை அனுப்பப்படும். அதற்கேற்ப மூளையின் செயல்பாடுகள் தூண்டப்படும். மன அழுத்தம் நீடிக்கும்போது கழுத்து மற்றும் உச்சந்தலையில் வலி ஏற்படக்கூடும். கடும் தலைவலியையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
3. தூக்கத்தில் இடையூறு மனதை பாதிக்கும் சம்பவம் நடக்கும்போது அமைதியாக இருக்க முடியாது. அமைதியின்மை தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். சரியாக தூங்க முடியாது. கண்களை மூடி இருந்தாலும் நடந்த விஷயத்தையே மனம் நினைத்து பார்த்துக்கொண்டிருப்பதால் தூக்கம் தடைபடும்.
மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்