இந்த உலகத்தில் பிரச்சினை இல்லாத மனிதர்களே இல்லை. கிடைக்கும் வருமானம் மட்டும் போதும் என்று சொல்பவர்களும் இங்கே இல்லை. இருப்பதைக் கொண்டுதான் சிறப்பாக வாழ வேண்டும். ஏழை மீனவன் அவன். தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்து, அதை விற்று கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்தான். என்னதான் பாடுபட்டு உழைத்தாலும், வாழ்வில் மகிழ்ச்சி என்பதே இல்லாததுபோல் காணப்பட்டான். அதை மற்றவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொள்வான். அவனுடைய முகம் எப்போதும் வருத்தம் தோய்ந்த நிலையில் கடுகடுப்புடனேயே இருக்கும்.
‘நமது நண்பனுக்கு வருமானமும் குறைவு, நம்மை விட பிரச்சினைகளும் அதிகம். ஆனால் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லாமல் வாழ்கிறானே.. அது எப்படி?’ என சிந்தித்து சிந்தித்து மனக் குழப்பத்திலேயே உறங்கிப்போனான். மறுநாள் காலை எழுந்தபோதும், அவனுடைய மனக்குழப்பம் தீர்த்தபாடில்லை. அந்த ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் தன்னிடம் வருபவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதற்கு தீர்வு சொல்லி வந்தார். ‘அந்த துறவியை சென்று பார்த்தால், நம் மனக்குழப்பம் தீர வாய்ப்பு கிடைக்குமா?’ என்று கருதிய மீனவன், உடனடியாக புறப்பட்டு துறவியின் குடிலுக்குச் சென்றான். குடிலுக்குள் அமர்ந்திருந்த துறவியை வணங்கிய மீனவன், தன்னுடைய குழப்பங்களை எடுத்துரைத்தான். அவரோ அவன் கூறிய அனைத்தையும் கேட்டுவிட்டு அமைதியாக புன்னகைத்தபடி, அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.
இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்