சூதாட்ட நிபந்தனைப்படி, வனவாசமும், அஞ்சாத வாசம் எனப்படும் மறைவு வாழ்க்கையும் முடிவுற்று விட்டதால், இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற பாண்டவர்கள் விரும்பினார்கள். கவுரவர்களால் திட்டமிட்டே வனவாசம் அனுப்பட்டவர்கள், பாண்டவர்கள். அவர்களின் 12 வருட வனவாசமும், 1 வருட மறைவு வாழ்க்கையும் கழிந்து விட்டது. பாண்டவர்களுக்கு இப்போது வாழ்வதற்கு இடம் வேண்டும். சூதாட்ட நிபந்தனைப்படி, வனவாசமும், அஞ்சாத வாசம் எனப்படும் மறைவு வாழ்க்கையும் முடிவுற்று விட்டதால், இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற பாண்டவர்கள் விரும்பினார்கள். அதுபற்றி தங்களின் சார்பாக கவுரவர்களிடம் பேசவும், தங்களின் கோரிக்கையை எடுத்துரைக்கவும் யுதிஷ்டிரன் எனப்படும் தருமன், கிருஷ்ணரைத் தேர்வு செய்தான். அதன்படி கிருஷ்ணரை அழைத்து, “கண்ணா.. நீ கவுரவர்களிடம் சென்று, எங்களுக்கான ராஜ்ஜியத்தை கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், ஐந்து சிறிய நாடுகளையாவது கேள். அதுவும் மறுக்கப்பட்டால், ஐவருக்கும் ஐந்து வீடுகளையாவது கேள். எப்படியாவது போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு” என்றான்.
பாண்டவர்களில் ஒருவனான நகுலனுக்கும் போர்தான் சரியான வழி என்று பட்டது. திரவுபதியோ, “கண்ணா.. என் சபதம் என்னாவது? துரியோதனன் அழியவில்லை என்றால், நான் என்னுடைய கூந்தலை அள்ளி முடிவது எப்போது?” என்று கேட்டால். அந்த தொனியே, அவள் போரை விரும்புகிறாள் என்று பறைசாற்றியது. இப்போது கிருஷ்ணன், சகாதேவனைக் காணச் சென்றார். அவனிடமும், “சகாதேவா.. நான் கவுரவர்களிடம் தூது செல்லப்போகிறேன். நீ போரை விரும்புகிறாயா.. இல்லையா.. போரை நிறுத்துவதற்கு உன்னிடம் ஏதாவது வழி இருக்கிறதா?” என்று கேட்டார், கிருஷ்ணன்.
இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்