நெடுஞ்செழியனைப்
பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே இந்த நூல்
சங்கத் தமிழ்
இலக்கியத் தொகுப்பான
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்
பொதுவாக குளிர் என்பது
உடலையும் உயிரையும்
மனதையும் உருக்கும்
உயிரை உருக்கும் குளிர்
நல்ல குளிராக எப்படி பெயர் பெற்றது நெடுநல்வாடையில்
இந்த நூலில்
எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள்
வாடைக்காலத்தில் நிகழ்வதாலும்,
தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும்,
போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு
இது ஒரு நல்ல வாடையாகவும்
அமைந்தது குறித்தே
இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை
எனப் பெயர் பெற்றது
நீண்ட காலம்
தலைவனும் தலைவியும்
பிரிந்து இருந்ததால்
அவர்கள் இருவருக்குள்ளும்
அன்பு மேலும் மேலும் பெருகியது
அந்த நிகழ்வும் நெடுநல்வாடை
என்ற பெயருக்கு உகந்ததாக உள்ளது
--------------------------------
பாடியவர் ::
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
திணை :: வாகை
துறை :: கூதிர்ப்பாசறை
பாவகை :: ஆசிரியப்பா
மொத்த அடிகள் :: 188