தீண்டாமை விலக்கு என்றால், ஒருவனைத் தொட்டு விடுவதாலும் கோயிலுக்குள் புகவிட்டு விடுவதாலும் தீண்டாமை விலகிப் போய்விட்டது என்று கற்பித்து, அந்தப்படியே இந்நாட்டு மக்களை நம்பச் செய்து, அவ்வளவு செய்தாலே போதுமென்று சொல்லி, அதற்கே பெரிய புரட்சி செய்ய வேண்டிய தாய் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம். அப்படிச் சொல்லுகின்றவர்களையே மகான்கள் - மகாத்மாக்கள் பொதுஜன சேவைக்காரர், தீண்டாமை விலக்கு வீரர், வைக்கம் வீரர் - என்றெல்லாம் ஆக்கிவிட்டோம்.