சிறுகதையின் பெயர்: சிவப்பாக, உயரமாக, மீசையில்லாமல்
புத்தகம் : ஆதவன் சிறுகதைகள்
ஆசிரியர் : ஆதவன் (1942 - 1987)
வாசித்தவர்: S. சேதுகுமாரி, திருச்சி. 90 களுக்கு முன் எழுதப்பட்ட இக் கதை எக்கால கட்ட யுவன், யுவதிகளோடு பொருத்திப் பார்க்கக் கூடிய அளவு உயிரோட்டமான, உள்முகமாகப் பயணிக்கக் கூடிய கதை.
மனிதர்களின் மனோபாவங்களும், தம்மைப் பற்றிய அவதானிப்புகளும், கற்பனைகளும், சலனங்களும், ஊடே இழையோடிச் செல்கின்ற உலகியல் இயற்கையும் மிகைப்படுத்தல் சிறிதுமின்றி புனையப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் ஆதவன் , உண்மையை, மனவியலை நளினமாக அதே சமயம் இரசிக்கும்படியாக எழுதுவதில் வல்லவர்.
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.