திரை நாவல் வெளிவந்தபோது எனக்குள் தோன்றிய கேள்வி, அதன் மொழிபெயர்ப்பு குறித்து. அதைப் பற்றி முக்கிய விளக்கம் அளித்திருக்கிறார் ஜெயா வெங்கட்ராமன்.
பைரப்பாவை அவர் தொடர்புகொண்டது, அனுமதிக்காமல் மொழிபெயர்த்துவிட்டு அனுமதி வாங்கியது, பின்னர் நடந்தவை, கர்நாடகத்தில் பைரப்பாவின் மதிப்பு, கர்நாடகாவில் அரசியல்சார்பும் இலக்கியமும், பைரப்பா இளமையில் பட்ட கஷ்டங்கள், எதற்கும் அஞ்சாமல் தான் நம்பும் விஷயங்களைத் தொடர்ந்து வலியுறுத்திய விதம் எனப் பல விஷயங்களை மிகவும் யதார்த்தமாகப் பேசி இருக்கிறார் ஜெயா வெங்கட்ராமன்.
இலக்கியப் பேட்டி அல்ல. இலக்கியவாதியைப் பற்றி இன்னொரு இலக்கியவாதியின் நினைவுகூர்தல்.