ஆட்டின் கறியைக் கொண்டு பல வகையான பதார்த்தங்கள் தயார் செய்யலாம் .அனால் 'குருமா' என்னும் பாகம்தான் அதிக ருசிகரமானது . ஆட்டுக் கறிக் குருமா தயாரித்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம் . ஆப்பம் , இட்லி , தோசை இந்த வகையான பலகாரத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம் .பூரி , பரோட்டாவுடன் சாப்பிடலாம் . பன் , ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடலாம் . பதார்த்த வகையில் இது ஒரு தனிப்பட்ட ருசியுள்ளதாக இருக்கிறது .