இன்று நான் பேசும் வார்த்தைகளை முதலில் கேட்பது யார்?
சிந்தனை செய்து பார்த்தால் என்னுடைய வார்த்தைகளை எனக்கு முன்பே எண்ணங்களாக என் மனம் தான் கேட்கிறது மேலும் என் மனம் அந்த வார்த்தைகளை அனுபவித்த பிறகு தான் என்னிடமிருந்து அது வெளிப்படுகிறது நாம் பெரும்பாலும் கவனிக்கும் வெற்றியாளர்களின் தெளிவான நேர்மறையான வார்த்தைகள் நம்மை பெரிதும் கவர்ந்திருக்கும் அவர்கள் பேசும் வார்த்தைகளை முதலில் அவர்களின் மனம் அனுபவித்து அனுபவித்து இன்னும் நேர்மறையாக மாறிக் கொண்டிருக்கிறது இன்று என் வார்த்தைகள் வெளிப்படும் போது அதன் தாக்கம் முதன் முதலில் எனக்கு தான் ஏற்படுகிறது எனில் அதனை ஏன் நான் நேர்மறையாக மாற்றிக் கொள்ளக் கூடாது எப்போதும் மற்றவர்களை குறை கூறுவதும் தீய வார்த்தைகளை பேசும் முன்பு என் மனம் தான் அதனை அனுபவிக்கிறது அதனால் என் வாழ்க்கையும் அப்படியே வடிவமைக்கப்படுகிறது இதில் மிகவும் சிரிக்க கூடிய விஷயம் என்னவென்றால் நானே என் மனதிற்கு எதிர்மறையான உணர்வுகள் ஏற்பட காரணமாக இருக்கிறேன் என்பதுதான் சுய விழிப்புணர்வோடு என் வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும் போது அனுதினமும் ஆனந்தமே!!!!