ஜனநாயக நாட்டில் எந்த ஒரு மாநில அரசாங்கமாக இருந்தாலும் அது மக்களுக்காக செயல்படும் பொழுது வருவாய் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக கடன் பெறுவதும் தவிர்க்க முடியாதவை. ஆனாலும், இவை அனைத்தும் ஒரு வரம்புக்குள் அடங்க வேண்டும். அது எல்லையை தாண்டக்கூடாது. அப்போதுதான், அந்த மாநில மக்களும் மாநிலமும் வளர்ச்சி பாதைக்கு செல்லும். இதில் சில ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்தமான வருவாய் வரவை காட்டிலும், அரசின் செலவு அதிகரிக்கும்போது வரு வாய் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறையால், தினசரி தேவைகளுக்கும் பணம் இல்லாமல் தத்தளிக்கும் நிலை உருவாகிறது.