ராணுவத்திற்கு வீரர்களைத் தேர்ந் தெடுக்கும் முறையில் மிகவும் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் அக்னிபாதை திட்டம், இளைஞர்கள் மத்தியிலிருந்தும், முன்னாள் ராணுவத்தினரின் பல்வேறு வகையினரிடமிருந்தும் மிகவும் விரிவான அளவில் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் ஒன்றிய அரசாங்கம் இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் ராணுவத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பலரும் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றில் மிகவும் முக்கியமானது, ‘அக்னிவீரர்கள்’ (‘agni veers’) என்று பகட்டு ஆரவாரமாகப் பெயரிட்டுள்ள இந்த நாசகர நயவஞ்சத் திட்டத்தை இளைஞர்கள் அதிலும் குறிப்பாக கிராமப் புற இளைஞர்கள் மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அக்னிபாதை திட்டமானது இந்திய அரசின் கேந்திரமான நிறுவனமான ராணுவத்தின் மீதான தாக்குதலாகும். இது எதிர்க்கப்பட வேண்டியதும், இதற்கெதிராகக் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டி யதும், இது திரும்பப்பெறப்பட வேண்டியதும் அவசியமாகும்.