உன் கரம் பற்றி
நெடுந்தூரம் கடந்து
வெளீர் மஞ்சள் நிற மலர்கள்
நிறைந்த மலைப்பாதை
ஒன்றில்
சிறு நிழலுக்கு ஒதுங்கிய பொழுது
கதவடைத்துக்கொண்டிருந்த
கிழவி கொடுத்த
கோலி சோடாவில்
உலகத்தின் அத்தனை அன்பும் நிறைந்து வழிந்தது....
உனதும் எனதுமான காதல் நமதானது அக்கணப்பொழுதில் தான்......