8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மெட்டா நிறுவனம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மெட்டா நிறுவனம் உலகளாவிய பணியாளர்களில் இருந்து 8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது. புதிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வேலைவாய்ப்புப் பறிப்பு அரங்கேறியது. மனித உழைப்பைக் குறைத்து, AI மூலம் பணிகளை எளிதாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என மெட்டா நிறுவனம் தெரிவித்தது.