தவெக தலைவர் விஜய்யின் சொத்து விவரங்களை ஆய்வு செய்யகோரிய மனு தள்ளுபடி
மனைவி உள்ளிட்டோருக்கு பெருந்தொகையை கடனாக வழங்கியுள்ளதாக, த.வெ.க தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் கூறியுள்ளது குறித்து ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அமர்வு, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது