உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். யோவான் 4:23
ஆச்சரியமான தேவனே, நீர் யார் என்பதையும், உம்முடைய மகத்துவ செயல்களையும், நீர் வாக்குப்பண்ணியதையும் எண்ணி, மகிழ்ந்து, உம்மை ஆராதிக்க எனக்கு உதவி செய்யும்.