தமிழ் மொழியின் சிறப்புகளைச் சொல்ல சொற்கள் போதாது. தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளைச் சொல்ல வாழ்நாள் போதாது. அத்தகைய இலக்கியச் சொத்தின் ஒரு துளி இது:
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே.
(இலக்கியம்: குறுந்தொகை. இயற்றியவர்: கூடலூர்க்கிழார்)